Tuesday, April 28, 2009

அசிங்கம் / வெட்க கேடு

தற்போது தி.மு.க கூட்டனி கட்சிகளும், தி.மு.க.வும் ஒரு விசயத்தை பெரியாதக்க முயல்கிறது. அது அண்ணா. தி.மு.க.வில் குறிப்பிட்டு உள்ள சேது சமுத்திர திட்டத்தை பற்றி.
தி.மு.க-வுக்கும், அதன் கூட்டணிக்கு வேற பிரச்சனைகளே கண்ணுக்கு தெரியவில்லைய. -இதை எழுப்புவதன் மூலம், அவர்கள் மற்ற விசயங்களை மூடி மறைக்க பார்க்கிறார்கள். அவர்களுக்கு,
1. தினம் தினம் செத்து மடியும் நம் தமிழ் இனத்தின் சாவை , அழிவை வேடிக்க பார்ப்பது - இலங்கை பிரச்சைனைகள் தெரியவில்லையா கண்ணக்கு?
2. காவல் துறைக்கும், வக்கீகளுக்கும் இடையே நடந்த பிரச்சைனைகள் தெரியவில்லையா ?
3. விலைவாசி உயர்வால், அரிசியும், சமையல் பொருள்களின் விலையும் விண்ணை தாண்டும் அளவுக்கு ஏறினது பிரச்சைனைகளா தெரியவில்லையா ?
4.விவசாயகளின் வாழ்க்கை தரம் உயர்த்தபடாமல் , இன்னும் ஏழ்மை நிலைய அடைவது பிரச்சைனைகளா தெரியவில்லையா ?
5.சரியான அளவுக்கு மின்சாரம் உற்பத்தி இல்லாமல், தமிழ் நாடு இருட்டிலும், சிறு தொழிலார்கள் வேலை இழந்தும், பெறும் கடனாளி ஆனது, பிரச்சைனைகளா தெரியவில்லையா ?
6.அடிப்படை வசதிகாளான, நல்ல குடிநீரும், நல்ல சாக்கடை வசதிகளும் செய்யாமல், சென்னையும், தமிழ்நாடும்- இன்னமும் நாறிக் கொண்டு இருப்பது இவர்களுக்கு பிரச்சைனைகளா தெரியவில்லையா ?
7.தேவையான அடிப்படை கட்டமைப்புகளை (சாலை மற்றும், பாலங்களும்) இன்னமும் சரி செயாமல், போடாமல், இருப்பது இவர்களுக்கு பிரச்சைனைகளா தெரியவில்லையா ?
8.கொலை, கொள்ளை , வழிபறிகள் என்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவது இவர்களுக்கு பிரச்சைனைகளா தெரியவில்லையா ?
9 ரொம்ப நாளாகவே தமிழ் மீனவர்களை சுட்டுத் தள்ளும் இலங்கை ராணுவத்தின் அட்டூழிலியம் இவர்களுக்கு பிரச்சனைகளாகா தெரியவில்லையா?
10 காவிரி மற்றும் பாலாறு போன்று தமில் நாட்டை சுற்றியும் தண்ணீர் பிரச்சனைகல் எல்லாம் இவர்களுக்கு பிரச்சனைகளாகா தெரியவில்லையா?....இன்னும் எவ்வளவோ....இவர்களுக்கு யார் தீர்ப்பளிப்பார்கள்?